Friday, July 15, 2011

பராஅத் ஓர் ஆய்வு

சுன்னத்தும் பித்அத்தும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

குர்ஆன் ஹதீஸைப் போல முஸ்லிம்களின் அதிக கவனத்திற்குரிய வேறு இரு சொற்கள், சுன்னத் பித்அத்

துரதிஷ்டவசமாக தற்கால முஸ்லிம்கள் இவற்றின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளததால் ஏகப்பட்ட பிரச்சினைகளும் பிளவுகளும் தோன்றின.

இன்றைய இளைய முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் பித்அத் என்ற வார்த்தையின் சரியான பொருளை புரிந்து கொள்ளாமலே சமுதாயத்தை பிளவு படுத்திக் கொண்டிருக்கினறனர் .

தீன் என்ற பெயரில் தீனின் அடிப்படைகளுக்கும் தெளிவுகளுக்கும் மாற்றமாக வறட்டு சித்தாந்தத்தில் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப்பிரச்சினைக்கு, பிற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களாக புகழப்பட்ட இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் ஆகிய இருவரின் தவறான அபிப்பிராயங்களே முக்கிய காரணமாகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் ஷிர்க் சாயம் பூசி தங்களை மட்டுமே உண்மையான முஸ்லிம்களாக காட்டிக் கொள்ள முயலும் இன்றைய சவூதி அரசாங்கத்தின் பரப்புரைகளும் ஒரு பெரும் காரணமாகும்.

சுன்னத் ஹதீஸ் அறிஞர்களிடம் :
ما نقل عن النبي صل الله عليه وسلم قولا، وفعلا, وإقرارا

சுன்னத் சட்ட அறிஞர்களிடம்
ما واظب النبي صل الله عليه وسلم بتركه احيانا

பெரும்பாலான சமயங்களில் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட வழி முறை என்பதே சுன்னத் என்பதின் பொருளாகும். சில சமயங்களில் அதை தவிர்த்தும் இருப்பார்கள்.

சுன்னத்கள் பின்பற்றப் படனும் – இஸ்லாமின் அடிப்படைகளை முழுமைப் படுத்துபவை சுன்னத்துகளே. சுன்னத்துக்கள் இல்லாத இஸ்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. உயிரில்லாத உடல் போன்றது. அல்லது உடலில்லாத உயிர் போன்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ(20) الانفال
مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا(80) النساء
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِيهِ فَأُوْلَئِكَ هُمْ الْفَائِزُونَ(52) النور
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا(17) الفتح

சாப்பிட்ட பிறகு விரல் சூப்புவதிலிருந்து அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களிடமிருந்து அன்பளிப்புக்களை ஏற்கக் கூடாது என்பது வரை வாழ்க்கைப்பாதையின் வழி நெடுகிலும் தனித்துவமிக்க தனது வழி முறைகளை விட்டுச் சென்ற பெருமை பெருமானாரைப் போல வேறெவருக்கும் இல்லை.

குடும்பம், சமூகம், அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் என அனைத்து துறையிலும் பெருமானாராது வழிமுறைகள் உண்டு.

சுன்னத் தானே என்ற அலட்சியம் கூடாது.
பர்ளை நிறைவேற்றாவிட்டால் அல்லாஹ் பிடிப்பான். சுன்னத்தை விட்டால் பிரச்சினை இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

இந்த எண்ணம் தவறு. சுன்னத் கடமை அல்ல என்றாலும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றே.

சுன்னத்தை கடைபிடிக்கிற போதுதான் பெருமானாரின் ஷபாஅத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சுன்னத் என்பது பெருமானாரின் வழி முறை மட்டுமல்ல நபித்தோழர்களது வழி முறைகளும் சேர்ந்ததாகும்.

عن عِرْبَاضَ بْنَ سَارِيَةَ : وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ

சுன்னத்துக்களை பின்பற்றுவதில் சஹாபாக்களின் ஆர்வம் -

உதாரணம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ

عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ وَرَمَى بِسَبْعٍ وَقَالَ هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طَوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَهُ

كَانَ ابْنُ عُمَرَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ لَا يُصَلِّي قَبْلَهَا وَلَا بَعْدَهَا فَقِيلَ لَهُ مَا هَذَا قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَصْبُغُ ثِيَابَهُ بِالزَّعْفَرَانِ فَقِيلَ لَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ – النسائي

சுன்னத்துக்களை தனி கவனத்தோடு பின்பற்றுகிற காலமெல்லாம் சமுதாயம் உன்னதமான இடத்தில் இருந்தது. இருக்கும். வழி தவறாது.

சுன்னத்துக்களை கடைபிடிக்கிற அதே நேரத்தில் பித்அத்கள் தவிர்க்கப் பட வேண்டும்

عن عائشة - رضي الله عنها - عن النبي - صلى الله عليه وسلم - قال: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد)) صحيح البخاري 4273

كان رسول الله - صلى الله عليه وسلم- يخطب الناس؛ يحمد الله، ويثني عليه بما هو أهله؛ ثم يقول: ((من يهده الله فلا مضل له، ومن يضلل الله فلا هادي له، وخير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة)) صحيح مسلم 867 ، وفي رواية للنسائي: ((وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار)) ،

பித்அத் என்றால் என்ன?

தற்காலத்தில் இது பற்றி முறையாக விளங்காமலே பல சுன்னத்துக்களை பித் அத் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

எதையாவது புதிதாக சொல்லி தங்கள பக்கம் மக்களை ஈர்க்க நினைக்கும் தீய தலைவர்களின் கைங்கர்யம் இது.

இத்தகையோர் பித்அத் என்பதற்கு பெருமானார் காலத்தில் இல்லாதது என்று பொத்தம் பொதுவாக கூறுவர்.


இது இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் போன்ற பிந்தய நவீனத்துவ சிந்தனையாளர்களின் சுய கருத்தும் விளக்கமுமாகும்,

"البدعة في الدين هي ما لم يشرعه الله ورسوله، وهو ما لم يأمر به أمر إيجاب ولا استحباب - ابن تيمية- مجموع الفتاوى 4/108

இந்த விளக்கம் நல்லது போல தோன்றினாலும் சரியானது அல்ல. ஆபத்தானது. சஹாபாக்களை ஒரு புறத்திலும் பெருமானாரை மறு புறத்திலும் நிறுத்தக் கூடியது.

இந்த விளக்கத்தின் காரணமாக நேர்வழி பெற்ற கலீபாக்களான உமர் உஸ்மான் (ரலி) ஆகியோரும் மற்ற பல சஹாபாக்களும் பெருமானாரிடமிருந்து புரிந்து கொண்டதன் அடிப்படையில் செய்த காரியங்களை பித் அத்தாக கண்டனர் (நவூது பில்லாஹ்)

உதாரணத்திற்கு ஜும் ஆவில் இரண்டு பாங்கு நடைமுறை. குர்ஆனை தொகுத்தது, ரமலான் முழுவதும் தராவீஹ் ஜமாத்.

பித் அத்தின் சரியான விளக்கம் : முன்னோடி மார்க்க விற்பன்னர்களின் கருத்து
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி – புகாரி விரிவுரையாளர்.

البدعة ;ما أحدث وليس له أصل في الشرع - الحافظ ابن حجر - فتح الباري
البدعة : "ما أحدث مما لا أصل له في الشريعة يدل عليه"- ابن رجب الحنبلي

இந்த விளக்கமே மார்க்கத்தையும் மார்க்க முன்னோடிகளையும் சரியாக புரிந்து கொள்ள உதவக்கூடியது.

பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றனர், அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ்அரி, போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பராஅத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

இப்படி ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித்அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்

பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ்களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சிசெய்யலாம்.

பராஅத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ளமுடியும்.

அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக தொழுகையில் துஆ செய்வதை பராஅத்தை பித்அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா?

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.

வருகிற 17 ம் தேதி இரவில் பள்ளிவாசல்களில் நடைபெறுகிற பரா அதி நிகழ்ச்சி களில் பங்கேற்பீர். முறையான அமல்களைச் செய்வீர்.

பராஅத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்ல. இதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்.

பரா அத் பற்றிய நபி மொழிகள்:
ابن ماجة
عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144


عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

عن عائشة قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب

عن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن

البيهقي

عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك-- ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل-- ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر



நன்றி; வெள்ளிமேடை பிளாக் ஸ்பாட்

No comments:

Post a Comment