Friday, July 15, 2011

பராஅத் ஓர் ஆய்வு

சுன்னத்தும் பித்அத்தும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

குர்ஆன் ஹதீஸைப் போல முஸ்லிம்களின் அதிக கவனத்திற்குரிய வேறு இரு சொற்கள், சுன்னத் பித்அத்

துரதிஷ்டவசமாக தற்கால முஸ்லிம்கள் இவற்றின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளததால் ஏகப்பட்ட பிரச்சினைகளும் பிளவுகளும் தோன்றின.

இன்றைய இளைய முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் பித்அத் என்ற வார்த்தையின் சரியான பொருளை புரிந்து கொள்ளாமலே சமுதாயத்தை பிளவு படுத்திக் கொண்டிருக்கினறனர் .

தீன் என்ற பெயரில் தீனின் அடிப்படைகளுக்கும் தெளிவுகளுக்கும் மாற்றமாக வறட்டு சித்தாந்தத்தில் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப்பிரச்சினைக்கு, பிற்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களாக புகழப்பட்ட இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் ஆகிய இருவரின் தவறான அபிப்பிராயங்களே முக்கிய காரணமாகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் ஷிர்க் சாயம் பூசி தங்களை மட்டுமே உண்மையான முஸ்லிம்களாக காட்டிக் கொள்ள முயலும் இன்றைய சவூதி அரசாங்கத்தின் பரப்புரைகளும் ஒரு பெரும் காரணமாகும்.

சுன்னத் ஹதீஸ் அறிஞர்களிடம் :
ما نقل عن النبي صل الله عليه وسلم قولا، وفعلا, وإقرارا

சுன்னத் சட்ட அறிஞர்களிடம்
ما واظب النبي صل الله عليه وسلم بتركه احيانا

பெரும்பாலான சமயங்களில் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட வழி முறை என்பதே சுன்னத் என்பதின் பொருளாகும். சில சமயங்களில் அதை தவிர்த்தும் இருப்பார்கள்.

சுன்னத்கள் பின்பற்றப் படனும் – இஸ்லாமின் அடிப்படைகளை முழுமைப் படுத்துபவை சுன்னத்துகளே. சுன்னத்துக்கள் இல்லாத இஸ்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. உயிரில்லாத உடல் போன்றது. அல்லது உடலில்லாத உயிர் போன்றது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ(20) الانفال
مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا(80) النساء
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِيهِ فَأُوْلَئِكَ هُمْ الْفَائِزُونَ(52) النور
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا(17) الفتح

சாப்பிட்ட பிறகு விரல் சூப்புவதிலிருந்து அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களிடமிருந்து அன்பளிப்புக்களை ஏற்கக் கூடாது என்பது வரை வாழ்க்கைப்பாதையின் வழி நெடுகிலும் தனித்துவமிக்க தனது வழி முறைகளை விட்டுச் சென்ற பெருமை பெருமானாரைப் போல வேறெவருக்கும் இல்லை.

குடும்பம், சமூகம், அரசியல், ஆன்மீகம் பொருளாதாரம் என அனைத்து துறையிலும் பெருமானாராது வழிமுறைகள் உண்டு.

சுன்னத் தானே என்ற அலட்சியம் கூடாது.
பர்ளை நிறைவேற்றாவிட்டால் அல்லாஹ் பிடிப்பான். சுன்னத்தை விட்டால் பிரச்சினை இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

இந்த எண்ணம் தவறு. சுன்னத் கடமை அல்ல என்றாலும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றே.

சுன்னத்தை கடைபிடிக்கிற போதுதான் பெருமானாரின் ஷபாஅத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

சுன்னத் என்பது பெருமானாரின் வழி முறை மட்டுமல்ல நபித்தோழர்களது வழி முறைகளும் சேர்ந்ததாகும்.

عن عِرْبَاضَ بْنَ سَارِيَةَ : وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ

சுன்னத்துக்களை பின்பற்றுவதில் சஹாபாக்களின் ஆர்வம் -

உதாரணம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ كُلَّ سَبْتٍ مَاشِيًا وَرَاكِبًا وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ

عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا قَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى جَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ وَرَمَى بِسَبْعٍ وَقَالَ هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طَوًى حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا وَيَذْكُرُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَهُ

كَانَ ابْنُ عُمَرَ لَا يَزِيدُ فِي السَّفَرِ عَلَى رَكْعَتَيْنِ لَا يُصَلِّي قَبْلَهَا وَلَا بَعْدَهَا فَقِيلَ لَهُ مَا هَذَا قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ

عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُوتِرُ عَلَى بَعِيرِهِ وَيَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ

أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يَصْبُغُ ثِيَابَهُ بِالزَّعْفَرَانِ فَقِيلَ لَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ – النسائي

சுன்னத்துக்களை தனி கவனத்தோடு பின்பற்றுகிற காலமெல்லாம் சமுதாயம் உன்னதமான இடத்தில் இருந்தது. இருக்கும். வழி தவறாது.

சுன்னத்துக்களை கடைபிடிக்கிற அதே நேரத்தில் பித்அத்கள் தவிர்க்கப் பட வேண்டும்

عن عائشة - رضي الله عنها - عن النبي - صلى الله عليه وسلم - قال: ((من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد)) صحيح البخاري 4273

كان رسول الله - صلى الله عليه وسلم- يخطب الناس؛ يحمد الله، ويثني عليه بما هو أهله؛ ثم يقول: ((من يهده الله فلا مضل له، ومن يضلل الله فلا هادي له، وخير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة)) صحيح مسلم 867 ، وفي رواية للنسائي: ((وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار)) ،

பித்அத் என்றால் என்ன?

தற்காலத்தில் இது பற்றி முறையாக விளங்காமலே பல சுன்னத்துக்களை பித் அத் என்று சிலர் பேசி வருகிறார்கள்.

எதையாவது புதிதாக சொல்லி தங்கள பக்கம் மக்களை ஈர்க்க நினைக்கும் தீய தலைவர்களின் கைங்கர்யம் இது.

இத்தகையோர் பித்அத் என்பதற்கு பெருமானார் காலத்தில் இல்லாதது என்று பொத்தம் பொதுவாக கூறுவர்.


இது இப்னு தைய்மிய்யா முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் போன்ற பிந்தய நவீனத்துவ சிந்தனையாளர்களின் சுய கருத்தும் விளக்கமுமாகும்,

"البدعة في الدين هي ما لم يشرعه الله ورسوله، وهو ما لم يأمر به أمر إيجاب ولا استحباب - ابن تيمية- مجموع الفتاوى 4/108

இந்த விளக்கம் நல்லது போல தோன்றினாலும் சரியானது அல்ல. ஆபத்தானது. சஹாபாக்களை ஒரு புறத்திலும் பெருமானாரை மறு புறத்திலும் நிறுத்தக் கூடியது.

இந்த விளக்கத்தின் காரணமாக நேர்வழி பெற்ற கலீபாக்களான உமர் உஸ்மான் (ரலி) ஆகியோரும் மற்ற பல சஹாபாக்களும் பெருமானாரிடமிருந்து புரிந்து கொண்டதன் அடிப்படையில் செய்த காரியங்களை பித் அத்தாக கண்டனர் (நவூது பில்லாஹ்)

உதாரணத்திற்கு ஜும் ஆவில் இரண்டு பாங்கு நடைமுறை. குர்ஆனை தொகுத்தது, ரமலான் முழுவதும் தராவீஹ் ஜமாத்.

பித் அத்தின் சரியான விளக்கம் : முன்னோடி மார்க்க விற்பன்னர்களின் கருத்து
இப்னு ஹஜர் அல் அஸ்கலானி – புகாரி விரிவுரையாளர்.

البدعة ;ما أحدث وليس له أصل في الشرع - الحافظ ابن حجر - فتح الباري
البدعة : "ما أحدث مما لا أصل له في الشريعة يدل عليه"- ابن رجب الحنبلي

இந்த விளக்கமே மார்க்கத்தையும் மார்க்க முன்னோடிகளையும் சரியாக புரிந்து கொள்ள உதவக்கூடியது.

பராஅத் இரவு
பராஅத் இரவை பித் அத் என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வேகமாக பிரச்சாரம் செய்கின்றனர், அது சத்தியத்தை மூடி மறைக்கும் பிதற்றலாகும்.

அலி, ஆயிஷா, அபூ மூஸல் அஷ்அரி, போன்ற பல சஹாபாக்களின் அறிவுப்புக்களில் பராஅத் என்ற சஃபான் 15 ம் நாள் இரவு பற்றி குறிப்புக்கள் கிடைக்கின்றன.

ஹதீஸ் நூல்களில் திர்மிதி இப்னுமாஜா போன்றவற்றில் باب ما جاء في ليلة النصف من شعبان என்ற தலைப்புக்கள் போடப்பட்டு அதில் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன,

இப்படி ஒரு விசயத்தை அடிப்படை ஆதாரமற்ற பித்அத் என்று சொல்லுவோர் மார்க்க விசயத்தில் எவ்வளவு துணிச்சலாக பொய் சொல்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்

பராஅத் இரவு விசயத்தில் ஹதீஸ்களே இல்லை என்றால், அல்லது அத்தலைப்புக்களில் உள்ள ஹதீஸ்கள் மவ்ளுஃ இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தால் அல்லவா அதை மறுக்க முயற்சிசெய்யலாம்.

பராஅத் விசயத்தில் எதார்த்ததை ஒத்துக் கொள்ள மனமின்றி தமது சொந்த விருப்பத்தின் பின்னணியில் தேவையற்று வலிந்து வளைந்தும் வளைத்தும் சவூதி அறிஞர்கள் செய்யும் பகீரத முயற்சியை நியாயமாக யோசிக்கிற எவராலும் புரிந்து கொள்ளமுடியும்.

அரசாங்கத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டு ஆடம்பரத்தில் மிதக்கும் மன்னர்களுக்காக தொழுகையில் துஆ செய்வதை பராஅத்தை பித்அத் என்று கூறும் அதே பின்னணியில் இவர்கள் யோசிப்பதுண்டா?

சுமார் பத்து சஹாபாக்கள் அறிவிக்கிற ஒரு செய்தியை மறைத்து விட்டு, ஹதீஸ்களை அறிஞர்களின் தீர்ப்புக்களை ஒதுக்கி விட்டு தங்களது சுய விருப்பத்திற்கேற்ப மார்க்கத்திற்கு விளக்கம் கொடுக்க முயல்கிற தான் தோன்றிகளை புறக்கணிப்பீர்.

வருகிற 17 ம் தேதி இரவில் பள்ளிவாசல்களில் நடைபெறுகிற பரா அதி நிகழ்ச்சி களில் பங்கேற்பீர். முறையான அமல்களைச் செய்வீர்.

பராஅத் ஹல்வா, கொலுக்கட்டை , மற்ற இனிப்புகளை தயாரிப்பதும் அதை அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு பரிமாறுவதும் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாச்சாரமே தவிர அவை ஒரு வணக்கமல்ல. இதற்கு மட்டும் அக்கறை செலுத்தி அமல்களில் கவனம் செலுத்தாது இருந்து விடுவது அடிப்படையை பாழாக்கி விடும்.

பரா அத் பற்றிய நபி மொழிகள்:
ابن ماجة
عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144


عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلي فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر

عن عائشة قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قالت قد قلت وما بي ذلك ولكني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب

عن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقة إلا لمشرك أو مشاحن

البيهقي

عائشة – اتاني جبرئيل هذه ليلة النصف من شعبان ولله فيه عتقاء من النار بعدد شعور غنم كلب
ولا ينظر الله فيه الي مشرك-- ولا الي مشاحن-- ولا الي قاطع رحم-- ولا الي مسبل-- ولا الي عاق لوالديه -- ولا الي مدمن خمر



நன்றி; வெள்ளிமேடை பிளாக் ஸ்பாட்

Tuesday, April 26, 2011

கோடை சிந்தனை...


காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!
கோடைகாலம் ஆரம்பமாகிவிட்டது கோடையின் கொளுத்தும் வெயிலை விட்டும் குறிப்பாக கத்தரி வெயிலை விட்டும் நம்மைக் காத்துக்கொல்வதற்காக மருத்துவர்கள் மற்றும் சமுதாய ஆர்வளர்கள்,அனுபவ சாலிகள் பலவிதமான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் அவ்வப்போது பத்திரிக்கைகள்,வானொலி,தொ[ல்]லைக்காட்சி போன்றவற்றில் கூறிக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை கோடை வெயிலின் கோரப்பிடியிலிருந்தும், விடுமுறைக் காலங்களில் வீணாக சுற்றிதிரிவதிலிருந்தும் காப்பாற்றும் நிலையில் விடுமுறையும் பிள்ளைகளுக்கு பிரயோஜனமாக கழிவதற்காக கம்யூட்டர்,டைப்ரைட்டிங்,தையல் போன்ற உபரியான கல்விகளைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கின்றனர். இது பிள்ளைகளின் நேரங்களையும்,அவர்களின் ஒழுங்கு முறை நடவடிக்கைகளையும் பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதே நேரத்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் இவ்வுலக வெயிலின் வெப்பத்திலிருந்து தம் பிள்ளைகளை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்திவிடாமல் தாம் கொண்டுள்ள ஈமானின் அடிப்படையில் மறுஉலக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் குறிப்பாக மிகப்பெரும் நரக நெருப்பின் படுபயங்கரமான வெப்பத்தை விட்டும் அதன் தண்டனையை விட்டும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை மறந்து விடக்கூடாது.
அதனை நினைவூட்டும் விதமாக அல்லாஹுதஆலா தன் திருமறையில்
 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ (6)
 "ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் [குடும்பத்தினர்] மனைவி,மக்கள்,மற்றும் உங்களுக்கு கீழ் உள்ளவர்களையும் நரகநெருப்பை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதர்களும், கற்களுமாகும். {அதில் வேதனை செய்வதற்காக}இரக்கமற்ற இருகிய மனம் கொண்ட வலிமைமிக்க வானவர்கள் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளார்கள். இறைவன் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளதற்கு மாறு செய்யமாட்டார்கள்,அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவை உடனடியாக செய்துமுடிப்பர்கள்.{அவர்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும்,அரட்டுதலுக்கும் அசைய மாட்டார்கள்,காசு பணத்திற்கும்,கையூடிற்கும் மசிய மாட்டார்கள்.
[அல்குர்ஆன்:]
சிந்தனை;
இவ்வுலக நெருப்பின் பிரதிபலிப்பை போன்ற வெயிலின் உக்கிர வெப்பத்தையே நம்மால் தங்கிக்கொள்ள முடியவில்லை இவ்வுலக நெருப்பைவிட பன்மடங்கு அதிகமுள்ள நரக நெருப்பை நம்மால் எவ்வாறு தங்கமுடியும் எனவே அதிலிருந்து தப்பிக்கும் படி கூறிய அல்லாஹ் அதன் பயங்கரத்தையும் சிறுது எடுத்துக் கூறி எச்சரிக்கிறான் மேற்கூறிய வசனத்தின் தொடரில் "அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களும் ஆகும்" எனக்கூறி நரகில் மனித உடல்களால் எரிக்கப்படும் நரக நெருப்பு ஒரு பக்கம் துர்வாடையும்,உடல்கள் வேகுவதினால் வெளியேறும் சீல்சலங்களும் நிறைந்த அருவெறுப்பான நிலையையும், மற்றொரு பக்கம் கற்களால் எரிக்கப்படுவதால் கரைந்து சாம்பலாக வழியின்றி சதாவும் கனன்றுகொண்டே கொண்டே இருக்கும் வெப்பத்தாலும் ஆன வேதனை அங்கு ஏற்படும் என்பதைக்கூறி இப்படிப்பட்ட வேதனையை உங்களால் ஒரு போதும் தங்கிக்கொள்ள முடியாது எனவே அதை விட்டும் தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அவைகளை முழுமையாக கடைபிடிக்க முயற்சியுங்கள் என மிக்க கருணையுடன் கட்டளை பிரப்பிக்கின்றான்.
காக்கும் வழி?
இவ்வசனம் இறங்கியதும் சஹாபாக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது ஒவ்வொருவரும் அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளைகளை நிறைவேற்றியும்,அவனது விலக்கல்களை தவிர்ந்து கொள்வது கொண்டுமே நரகை விட்டும் தப்பிக்க முடியும் இதை நாம் செய்து விடலாம் ஆனால் நம் மனைவி மக்களை எப்படி நம்மால் காப்பாற்ற முடியும் என்பது புரியவில்லையே என்று நினைத்து அதற்கான விளக்கத்தை நபி[ஸல்]அவர்களிடமே கேட்டுத்தெரிந்து கொள்ள முற்பட்டார்கள்.
قوله : { يأَيُّهَا الذين ءامَنُواْ قُواْ أَنفُسَكُمْ } بفعل ما أمركم به ، وترك ما نهاكم عنه { وَأَهْلِيكُمْ } بأمرهم بطاعة الله ، ونهيهم عن معاصيه { نَاراً وَقُودُهَا الناس والحجارة } أي ناراً عظيمة تتوقد بالناس وبالحجارة كما يتوقد غيرها بالحطب ، وقد تقدّم بيان هذا في سورة البقرة . قال مقاتل بن سليمان : المعنى : قوا أنفسكم وأهليكم بالأدب الصالح النار في الآخرة . وقال قتادة ، ومجاهد : قوا أنفسكم بأفعالكم ، وقوا أهليكم بوصيتكم . قال ابن جرير : فعلينا أن نعلم أولادنا الدين والخير ، وما لا يستغنى عنه من الأدب ، ومن هذا قوله : { وَأْمُرْ أَهْلَكَ بالصلاة واصطبر عَلَيْهَا } [ طه : 132 ] وقوله : { وَأَنذِرْ عَشِيرَتَكَ الأقربين } [ الشعراء : 224 ](فتح القدير:7/257)
ஹழ்ரத் உமர்{ரலி}அவர்கள் நபி{ஸல்}அவர்களிடம் வந்து யாராசூலல்லாஹ்! நாங்கள் [பாவங்களை விட்டும் தவிர்ந்து இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதின் மூலம்]எங்களை நரகை விட்டும் பாதுகாத்துக்கொள்ளும் வழியை அறிந்துள்ளோம், ஆனால் எங்களின் மனைவி,மக்களை எவ்வாறு நரகை விட்டும் காப்பாற்றும் வழி தெரியவில்லையே என கேட்க அதற்கு நபி[ஸல்] அவர்கள்; அல்லாஹுதஆலா உங்களை எவைகளைச் செய்யும்படி கட்டளையிட்டுள்ளானோ அவைகளைச் செய்யும்படி உங்கள் குடும்பத்தினரையும் ஏவுங்கள். அவன் எவற்றைச் செய்ய வேண்டாம் என உங்களைத் தடுத்துள்ளானோ அவைகளை உங்கள் குடும்பத்தினரும் செய்ய வேண்டாம் என தடுத்து விடுங்கள்.இதுவே நீங்கள் அவர்களை நரகை விட்டும் காக்கும் வழியாகும் என கூறினார்கள்.           {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}

குடும்பத்தினர் மீது அக்கறை:
இந்த வசனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தன் மனைவி,மக்களுக்கு ஷரீஅத்தில் கடமையாக்கப்பட்ட விஷயங்கள்,[ஹலால்] ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள், [ஹராம்] தடுக்கப்பட்ட விஷயங்கள் போன்றவற்றின் அடிப்படை சட்டதிட்டங்களை காற்றுக்குக் கொடுப்பதும் அவற்றின்படி செயல்படச் செய்வதும் {ஃபர்ளு} கட்டாயக் கடமையாகும் என சட்டவல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.    {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}
عن أَنَس بْن مَالِكٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ(ابن ماجة) عن أَيُّوب بْن مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنهم قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ.(احمد

يُحَدِّثُ  أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة 3661



ஒரு ஹதீஸில் வந்துள்ளது "எந்த மனிதர் தன் குடும்பத்தினர்களுக்கு உங்களின் தொழுகையை நிறைவேற்றுங்கள்! உங்களின் கடமையாக்கப்பட்ட நோன்பை கடைபிடியுங்கள்! உங்கள் செல்வத்தின் மீது கடமையான ஜகாத்தை சரியாக {கணக்கிட்டு} கொடுத்து விடுங்கள்! உங்களில் ஏழைகளுக்கு பொருளுதவி செய்யுங்கள்! இன்னும் உங்களில் அநாதைகளை ஆதரித்து வாருங்கள்! உங்கள் அண்டை வீட்டாரை அனுசரித்து வாழுங்கள்! என அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பிரத்தியேகமாக அருள் புரிவானாக! அதன் மூலம் உங்கள் அனைவரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒன்று சேர்க்க வழியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.   {நூல்;மஆரிஃபுல் குர்ஆன்}
எச்சரிக்கை:
قال رسول الله صلى الله عليه وسلم : « ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الأعظم الذي على الناس راع وهو مسئول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسئول عن رعيته والمرأة راعية في بيت زوجها وولده وهي مسئولة عن رعيتها وعبد الرجل راع على مال سيده وهو مسئول عنه ألا فكلكم راع وكلكم مسئول عن رعيته »
ஒரு ஹதீஸில் வந்துள்ளது உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பு தாரிகள் நாளை மறுமையில் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்! ஒரு மனிதர் தன் குடும்பத்தினருக்கு பொருப்புதாரியாவார் மறுமையில் அவரின் குடும்பத்தினர் பற்றி {அவர்களின் கடமைகளைச் சரிவர நிறைவேற்றினாரா அவர்களுக்கு மார்க்கஞானத்தைப் போதித்து அல்லாஹ்வை அஞ்சி நடக்கச் செய்தாரா? என} விசாரிக்கப்படுவார்.
மற்றொரு ஹதீஸில் நாளை மறுமையில் மனிதர்களில் அதிகம் வேதனைக்குரியவர் தன் குடும்பத்தினர்க்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்த மறந்தவராவார். என வந்துள்ளது.
எனவே அன்பார்ந்த பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை என்ன என்பதை அறிந்து அவற்றை சரிவர நிறைவேற்றுவதின் மூலமே இறைவனின் பிடியிலிருந்து நீங்களும் தப்பிக்க முடியும், நரக வேதனையிலிருந்து உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்க முடியும்.
பின்குறிப்பு: ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் அடிப்படை மார்க்க விளக்கத்தைக் கற்றுக்கொடுப்பது கட்டாய கடமையாகும். படிக்கின்ற காலத்தில் குறைந்தது விடுமுறைக் காலங்களிலாவது அதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கவில்லையானால் அதைவிட துர்ப்பாக்கியம் வேறேதுமில்லை.அல்லாஹ்வின் கிருபையால் இன்று பரவலாக பல இடங்களில் கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் படுகின்றன அவற்றில் நம் பிள்ளைகளை சேர்த்து நரகைவிட்டும் காக்க ஒரு சிறு முயற்சியாவது செய்வோமாக.
அல்லாஹ் நம் முயற்சிகளை பயனுள்ளதாக ஆக்குவானாக ஆமீன்.



மௌலவி,ஹாபிஸ்,அப்சலுல் உலமா.
அ.முஹம்மது ஆதம் ரஷாதி M..A,

Monday, April 4, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு?

தேர்தல் சிந்தனை
ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இல்லையெனில் மக்களின் வாழ்வு பாதிக்கப்படும். நாட்டில் வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடும் என்பதற்கு முந்தையவரலாற்று நிகழ்வுகள் நமக்கு சான்றாக உள்ளன.[உம்]கீழுள்ள நிகழ்ச்சியாகும்.
274- حدثنا عبد الله قال : حدثنا أحمد بن إبراهيم بن كثير العبدي ، قال : حدثني خلف بن تميم ، قال : حدثنا إسماعيل بن إبراهيم بن مهاجر ، قال : سمعت أبي يذكره عن مجاهد ، قال : « كان ملك أعطي طول عمر ، وكان شديد الحجاب ، فقال : ما يعرفني إلا ناس قليل من أهل مملكتي ، فلو سيرت في الأرض لأنظر ما يقول الناس ويشكون ؟ فقال لحاجبه : لا تدخلن علي أحدا ، وأخبرهم أني على وجع . قال : فذهب ، فنزل على رجل له بقرة تحلب حلاب ثلاثين بقرة ، فأعجبته ، فقال : لو أني أخذت هذه البقرة ؛ فإن لبنها يكفي من لبن ثلاثين بقرة ، فأصبحت البقرة قد ذهب ثلث حلابها ، فقال ذلك الملك لصاحبها : أخبرني عن بقرتك ، أرعيتها في غير مرعاها ؟ أو شربت في غير مشربها ؟ فقال الرجل : لا ، ولكن أرى الملك حدث نفسه بظلم ، فذهبت بركتها ، قال : والملك من أين يعرفك ؟ قال : هو الحق الذي أقول لك ، إن الملك إذا حدث نفسه بظلم ذهبت البركة ، قال : فعاهد الملك ربه ألا يأخذها أبدا . فرجع لبنها بعدل الملك ، وقال : ألا أرى إذا هم الملك بظلم ذهبت البركة ؟ »
நல்லாட்சி மலர்ந்தால்தான் நாம் பூமியில் வாழ்வதில் அர்த்தமுண்டு இல்லையெனில் நம் வாழ்வு அர்த்தமற்றதாகும் என்பதற்கு அண்ணலாரின் அறிவுரை சான்றாகும்.
2192 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْأَشْقَرُ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَا حَدَّثَنَا صَالِحٌ الْمُرِّيُّ عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا
سنن الترمذي:6/52
"உங்கள் ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும்,உங்களில் செல்வந்தர்கள் கொடைவள்ளல்களாகவும்,உங்களின் காரியங்கள் உங்களுக்கிடையில் [ஆண்கள்]ஆலோசிகப்பட்டும் நடைபெறுமானால் அப்பொழுது நீங்கள் பூமியின் மீது வாழ்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.இதற்கு மாற்றமாக உங்களின் ஆட்சியாளர்கள் மோசமானவர்களாக,உங்களில் செல்வந்தர்கள் கஞ்சர்களாக,உங்களின் காரியங்கள் உங்களின் பெண்களிடத்தில் ஒப்படைக்கப் பட்டதாக இருக்குமானால் அப்பொழுது பூமியில் வாழ்வதைவிட சாவதே மேல்.என நபிகள் [ஸல்] அவர்கள் நவின்றுள்ளார்கள்"
ஆட்சி மோசமாக அமைவதற்கு மக்களின் செயல்கள் தான் காரணம் என்பதையும் மார்க்கம் அறிவுறுத்தியுள்ளது;
1594 - حدثنا عبد الله ، حدثنا علي بن مسلم ، حدثنا سيار ، حدثنا جعفر ، حدثنا عنبسة الخواص ، عن قتادة قال : قال موسى بن عمران عليه السلام : يا رب ، أنت في السماء ونحن في الأرض فما علامة غضبك من رضاك ؟ قال : « إذا استعملت عليكم خياركم فهو علامة رضائي وإذا استعملت عليكم شراركم فهو علامة سخطي »
ஒரு முறை மூஸா [அலை]அவர்கள் அல்லாஹ்விடம் யா! அல்லாஹ் நீயோ வானத்தில்[எங்களின் கண்ணுக்கு தெரியாமல்]இருக்கிறாய் நாங்கள் பூமியில் இருக்கிறோம் நீ எங்களின் செயல்களை பொருந்திக்கொண்டு எங்களின் மீது மகிழ்ச்சியாக இருக்கின்றாயா?அல்லது எங்களின் செயல்கள் பிடிக்காமல் எங்களின் மீது கோபமாக இருக்கின்றாயா? என்பதை நாங்கள் எப்படி தெரிந்துகொள்வது எனக்கேட்க அதற்கு பதில் அல்லாஹுதஆலா பின்வருமாறு கூறினான்;நான் உங்கள் ஆட்சியாளர்களை நல்லவர்களாக நியமித்திருந்தால் அது என் மகிழ்ச்சிக்கு அடையாளம். உங்கள் ஆட்சியாளர்களை மோசமானவர்களாக நியமித்திருந்தால் அது உங்களின் செயல்களால் நான் கோபமுற்று இருப்பதற்கு அடையாளமாகும்.
இதைத்தான் பனூஇஸ்ரவேலர்களை அடக்கியாண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி புக்துநஸ்ரு என்பவனும் பதிலாக கூறினான்.அதாவது;அவனிடம் மக்கள் எங்களை ஏன் கொடுமைப் படுத்துகிறாய் எனக்கேட்க அதற்கவன் இது நானாக செய்யவில்லை நீங்கள் செய்யும் அநியாயம் அட்டூழியத்தால் இறைவன் உங்களின் மீது இவ்வாறு கொடுமைப் படுத்தும்படி என்னை ஏவி உள்ளான் எனக்கூறினான்.
இன்னொரு பக்கம் நாம் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஆட்சியாளர்களின் இந்த நிலைகண்டு மனம் தளர்ந்து விடாமல் இந்த அளவிலாவது இருக்கின்றதே இதைவிட மோசமான சூழ்நிலை ஏற்படாமல் அல்லாஹ் நம்மைப் பாதுகாத்துள்ளதற்காக நன்றி செலுத்தி பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதையும் எம்பெருமான் [ஸல்]அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
2132 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ قَالَ
دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَلْقَى مِنْ الْحَجَّاجِ فَقَالَ مَا مِنْ عَامٍ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُ هَذَا مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

பின்குறிப்பு;நல்லாட்சி அமைந்திட நாம் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டால் முடிந்து விடும் என்பது வெறும் பகல் கனவாகும் மாறாக நாமும் முதலில் நல்லவர்களாக வாழ்ந்தால்தான் நம்மை ஆள்பவர்களும் நல்லவர்களாக அமைவார்கள் அதில்லாதவரை ஆட்சியாளர்களை குறைகூறிக் கொண்டிருப்பது வீன்செயல் என்பதை உணர்வோமாக.

Sunday, February 20, 2011

சுன்னத்தைப் பேணி ஜன்னத்தைப் பெறுவோம்.


சுன்னத்தை பின்பற்றுவதில் சஹாபாக்களின் நடைமுறை;

640 - قال ابن جريج : قال عطاء : « فلا يخطئني إذا أفضت أن أشرب من ماء زمزم » قال : « وقد كنت فيما مضى أنزع مع الناس الدلو (1) التي أشرب منها اتباع السنة ، فأما مذ كبرت فلا أنزع ، ينزع لي فأشرب ، وإن لم يكن لي ظمأ ، اتباع صنيع محمد ، صلى الله عليه وسلم ، قال : فأما النبيذ (2) فمرة أشرب منه ، ومرة لا أشرب منه »
பொருள்;[௧]வாளி,[௨]பேரீச்சம்பழம் ஊறவைத்த தண்ணீர்.
விளக்கம்;ஹழ்ரத் அதாஉ [ரலி] ஜம்ஜம் தண்ணீர் அருந்துவதில் நபியவர்களின் வழிமுறையை பின்பற்றுவதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தனர் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.

344 - حدثنا أبو العباس محمد بن يعقوب ، أنبأ الربيع بن سليمان ، أنبأ الشافعي ، أنبأ سفيان ، عن هشام بن حجير ، قال : كان طاوس يصلي ركعتين بعد العصر ، فقال له ابن عباس : « اتركها » فقال : إنما نهي عنهما أن تتخذ سلما أن يوصل ذلك إلى غروب الشمس ، قال ابن عباس : « فإن النبي صلى الله عليه وسلم قد نهى عن صلاة بعد العصر ، وما أدري أيعذب عليه أم يؤجر لأن الله تعالى يقول : ( وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة (1) ) » « هذا حديث صحيح على شرط الشيخين ، موافق لما قدمنا ذكره من الحث على اتباع السنة ، ولم يخرجاه بهذه السياقة »
நபியவர்களின் வழிமுறைகளை பின்பற்றுவதிலும் அதில் மாற்றுக்கருத்திற்கு இடம்பாடிருப்பின் அதில் பேனுதலை சஹாபாக்கள் கடைபிடித்தனர் என்பதற்கும் இது சான்றாகும்.

(1)            பிற்காலத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும் என்பது பற்றியும் அப்போது மக்களின் மனநிலை தலைமைக்கு கட்டுப்படுவதில் பின்தங்கியிருக்கும். அதனால் மக்களுக்கு தங்களின் சமூகத் தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் தான் வெற்றி உண்டு என்பதை சுட்டிக் காட்டுவதுடன் தன் வழிமுறைகளையும் தனக்குப்பின் தனது சஹாபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றும்படி நபி [ஸல்]அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

- أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ حَدَّثَنِى خَالِدُ بْنُ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ : صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- صَلاَةَ الْفَجْرِ ثُمَّ وَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ، ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ ، فَقَالَ قَائِلٌ : يَا رَسُولَ اللَّهِ كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا. فَقَالَ :« أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ كَانَ عَبْداً حَبَشِيًّا ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِى فَسَيَرَى اخْتِلاَفاً كَثِيراً ، فَعَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ ». وَقَالَ أَبُو عَاصِمٍ مَرَّةً :« وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ ، فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ». تحفة 9890 إتحاف 13818





97 - أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةَ حَدَّثَنَا الأَوْزَاعِىُّ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ عَنِ الزُّهْرِىِّ قَالَ كَانَ مَنْ مَضَى مِنْ عُلَمَائِنَا يَقُولُونَ : الاِعْتِصَامُ بِالسُّنَّةِ نَجَاةٌ ، وَالْعِلْم ُ يُقْبَضُ قَبْضاً سَرِيعاً ، فَنَعْشُ الْعِلْمِ ثَبَاتُ الدِّينِ وَالدُّنْيَا ، وَفِى ذَهَابِ الْعِلْمِ ذَهَابُ ذَلِكَ كُلِّهِ.
மார்க்கக் கல்வி நிலைத்திருப்பது உலகமும் அதன் சீர்திருத்தமும் நிலைக்க காரணமாகும் அது குறைந்தால் சீர்குலைவுக்கு காரணமாகும் என்பதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

98
- أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ حَدَّثَنَا الأَوْزَاعِىُّ عَنْ يَحْيَى بْنِ أَبِى عَمْرٍو السَّيْبَانِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِىِّ قَالَ : بَلَغَنِى أَنَّ أَوَّلَ الدِّينِ تَرْكاً السُّنَّةُ ، يَذْهَبُ الدِّينُ سُنَّةً سُنَّةً كَمَا يَذْهَبُ الْحَبْلُ قُوَّةً قُوَّةً.
கயிற்றுப் பிரிகள் தனித்தனியாக பிரிந்தால் எவ்வாறு பலமில்லாமல் போகுமோ அது போன்று சுன்னத்துக்கள் குறையக் குறைய தீன் இல்லாமல் ஆகிவிடும் என்பதை சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் நம் சமுதாய மக்களின் நிலை குறிப்பாக சிறுவர்கள்,வாலிபர்களின் நிலை மிக மிக மோசமாகிக் கொண்டிருப்பது வருந்தத்தக்க விசயமாகும் சினிமா,சீரியல் மோகங்களில் சிக்கி மற்றார்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதில் செலுத்தும் அக்கறை சுன்னத்தான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் கொஞ்சமும் இல்லை என்பது நம் சமுதாயத்தின் இழி நிலைக்கு மிகப்பெரும் காரணம் என்பதை நாம் உணராமலே வாழ்ந்து கொண்டிருப்பது அதையும் விட மிகப்பெரும் அறியாமையாகும் அல்லாஹ்தான் நம் சமுதாயத்தைக் காக்கப் போதுமானவன்.

சுன்னத்தைப் பின்பற்றச் செய்வதில் சஹாபாக்களின் கண்டிப்பு;


ஒரு முறை ஹழ்ரத் உமர்[ரலி] அவர்களிடம் ஹழ்ரத் அப்துர்ரஹ்மான் பின்அவ்ஃப்[ரலி]அவர்கள் தங்கள் மகன் முஹம்மது[ரலி] அவர்களை அழைத்துக்கொண்டு வந்தனர் அப்பொழுது அச்சிறுவர் பட்டாடை அணிந்திருந்தார் அதைப் பார்த்த உமர்[ரலி] அவர்கள் என்ன உங்கள் மகன் பட்டாடை அணிந்துள்ளார்? என வினவ அதற்கு அப்துர்ரஹ்மான்[ரலி] அவர்கள் நானே பட்டாடை உடுத்தியுள்ளேன் என் மகன் சிறுபிள்ளை உடுத்தினால் என்ன? என்று பதில் கூறினார்கள் அதற்கு உமர்[ரலி] அவர்கள் உங்களுக்கு உடம்பில் அதிகமாக பேன் பத்திக்கொள்வதால் நபி[ஸல்] அவர்களிடம் நீங்கள் அதை முறையிட்டீர்கள் அதன் காரணமாக வைத்தியத்தின் அடிப்படையில் உங்களுக்கு நபி[ஸல்] அனுமதி அளித்துள்ளனர் அது போன்ற தொல்லை உன் மகனுக்கு இல்லையே பிறகு எப்படி நீர் அவருக்கு பட்டாடை அணிவிக்கலாம் எனக் கூறி அவர் உடம்பில் இருந்த பட்டாடையை உமர்[ரலி] அவர்கள் கிழித்தெறிந்தனர். சிறுபிள்ளைகள் பட்டு தங்கம் போன்றதை அணிந்தால் என்ன என்று கூறுபவர்கள் இந்த நிகழ்வினைப் பார்த்தாவது படிப்பினை பெறவேண்டும்.
[நூல்;ஹயாதுஸ் சாஹாபா]

Friday, January 28, 2011

குத்பா மேடை தயார்

அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பிற்கினிய  உலமா பெருந்தகைகளே நாம் ஒவ்வொருவரும் ஜும்மா பயானிற்காக ஒவ்வொரு வாரமும் தனிப்பட்ட முறையில் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் அதையே நமக்கிடையில் [முதாக்கரா] கருத்துப் பரிமாற்ற முறையில் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் நன்றாக இருக்குமே என்ற அடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் வாராவாரம் இந்தத் தளத்தில் பயான் குறிப்புகளை வெளியிட விரும்புகிறேன் தாங்கள் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்தால் ஆக்கமும் ஊக்கமும் கொண்டு செயல்பட நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் அல்லாஹ் நம் முயற்சிகளை கபூல் செய்வானாக ஆமீன்.வஸ்ஸலாம்.